ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, சமீபத்தில் தனது கணவர் நடிகர் நாக சைதன்யாவை விட்டுப் பிரிந்தார். பிரிவுக்குப் பின் மீண்டும் சினிமாவில் பிஸியாக களமிறங்க அவர் முடிவு செய்துள்ளதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பான்-இந்தியா படமாக உருவாகி வரும் 'புஷ்பா' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளார் சமந்தார். ஒரு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு சமந்தா நடனமாடுவது இதுவே முதல் முறை. இப்பாடலில் கிளாமராக நடனமாடவும் சமந்தா சம்மதித்துள்ளாராம். எனவே, இந்தப் பாடலை பிரம்மாண்டமாக படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம்.
இப்படி ஒரு 'ஐட்டம் சாங்' இதுவரை தெலுங்குத் திரையுலகத்தில் வந்தது இல்லை என்று சொல்லுமளவிற்கு பாடல் இருக்க வேண்டும் என படத்தின் இயக்குனர் சுகுமார் சொல்லி இருப்பதாகவும் தகவல்.
தற்போது தெலுங்கில் 'சாகுந்தலம்' படத்திலும், தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்திலும் நடித்து முடித்துள்ளார் சமந்தா. இரண்டு மொழிகளிலும் மேலும் பல புதிய படங்களில் நடிக்க கதைகளைக் கேட்டு வருகிறாராம்.