டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமான வரலாற்று படமாக உருவாகி உள்ளது மரைக்கார் - அரபிக்கடலிண்டே சிம்ஹம். இந்த படத்தை மோகன்லாலின் நெருங்கிய நண்பரான ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார். கடந்த வருடம் இந்த படத்தை ஒடிடி தளங்கள் போட்டி போட்டு கேட்டபோதும் கூட தியேட்டரில் தான் ரிலீஸ் செய்வேன் என உறுதியாக நின்றார் ஆண்டனி பெரும்பாவூர்.
ஆனால் இப்போது கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் கூட அதில் மரைக்கார் படத்தை வெளியிடுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களால் எதிர்பார்த்த வசூல் கிடைக்காது என்பதால் தனது முடிவை மாற்றிக் கொண்டு ஒடிடியில் படத்தை ரிலீஸ் செய்யத் தயாரானார்.
இவ்வளவு பெரிய படம் வெளியாகும்போது தியேட்டருக்கு பொதுமக்கள் திரண்டு வருவார்கள், ஓரளவு லாபமும் பார்க்கலாம் என்று எண்ணியிருந்த திரையரங்கு உரிமையாளர்கள் அவரது இந்த முடிவால் அதிர்ச்சி அடைந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அதன்பிறகு கேரள மாநில அமைச்சர் ஷாஜி செரியன் இந்த விவகாரத்தில் தலையிட்டு சில உறுதிமொழிகளை கொடுத்தபிறகு இந்த படம் முதலில் தியேட்டரில் வெளியாகும் என்றும் அதன் பிறகு ஒடிடியில் வெளியாகும் என்றும் முடிவானது. ஆனால் மோகன்லாலும் படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூரும் மீண்டும் இந்த படத்தை தியேட்டரில் வெளியிடுவதற்கு முடிவெடுப்பதற்கு என்ன காரணம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இந்த படத்தை ஒடிடியில்தான் வெளியிடுவது என தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் உறுதியாக முடிவு எடுத்த நிலையில் படத்தின் இயக்குனரான பிரியதர்ஷன், மோகன்லால், ஆண்டனி பெரும்பாவூர் இருவரையும் சென்னையில் உள்ள ஒரு பிரிவியூ தியேட்டருக்கு வரவழைத்து தான் வேறு ஒரு படத்திற்காக கோல்கட்டா செல்ல இருப்பதாகவும், அதற்கு முன்னதாக கடைசியாக ஒருமுறை மரைக்கார் படத்தை பாருங்கள் என்றும் கூறியுள்ளார். அவரது வேண்டுகோளை ஏற்று தயாரிப்பாளர், மோகன்லால் மற்றும் அவரது மனைவி சுசித்ரா மூன்று பேரும் இந்த படத்தை பார்த்துள்ளனர்.
ஏற்கனவே இவர்கள் இந்த படத்தை பார்த்து இருந்தாலும் தற்போது விஷுவல் எபெக்ட்ஸ் உள்ளிட்ட சில சிறப்பு அம்சங்கள் சேர்த்து மெருகூட்டப்பட்டு இந்த படத்தை பார்த்தபோது மூவருமே தங்களை மறந்தபடி படம் பார்க்க ஆரம்பித்தனராம். குறிப்பாக கிளைமாக்ஸ் சமயத்தில் மோகன்லாலின் மனைவி சுசித்ராவின் கண்களில் கண்ணீரே வந்து விட்டதாம். படம் முடிந்து விளக்குகள் எரிந்த பின்னரும்கூட மூவரும் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தனராம். அதன்பின் வெளியே வந்ததும் தயாரிப்பாளரிடம் மோகன்லால் கேட்ட கேள்வி இப்போது என்ன பண்ணலாம் என்பதுதான்.
காரணம் இப்படி ஒரு அருமையான படத்தை ரசிகர்கள் தியேட்டரில் பார்த்தால்தான் நம் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைத்ததாக அர்த்தம் என அவர் நினைத்துள்ளார். இதைத்தொடர்ந்து தயாரிப்பாளரிடம் இந்த படத்தை தியேட்டரில் வெளியிட்டால் எவ்வளவு நஷ்டம் வரும் என்று கேட்டுள்ளார். மோகன்லாலே இப்படி கேட்டதும் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் எவ்வளவு நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை நாம் தியேட்டரில் இந்த படத்தை வெளியிடுவோம் என கூறியுள்ளார். மோகன்லாலும், சரிதான் எவ்வளவு நஷ்டம் வந்தாலும் அடுத்த படங்களில் அதை நாம் சரி செய்து கொள்வோம். அதனால் மரைக்கார் படத்தை தியேட்டரிலேயே வெளியிடலாம் என உறுதியான முடிவை எடுத்தாராம்..