விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்டில் நடைபெறுவதாக இருந்தது. அன்றைய தினத்தில் மழை பெய்ததால் ஒத்திவைக்கப்பட்டு செப்டம்பர் 10ம் தேதி அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான பொறுப்பு சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் உள்ளே கூட செல்ல முடியாமல் வெளியிலேயே நிறுத்தப்பட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோல்டு, பிளாட்டினம், சில்வர் என பல ஆயிரம் மதிப்பு கொண்ட டிக்கெட் வாங்கிய பலரும் இசை நிகழ்ச்சியை பார்க்காமல் வீடு திரும்பியதாக குற்றம்சாட்டினர்.
இதனையடுத்து, டிக்கெட் வாங்கியும் உள்ளே நுழைய முடியாதவர்கள், டிக்கெட் பிரதியை குறிப்பிட்ட மெயில் ஐடிக்கு குறைகளை குறிப்பிட்டு அனுப்புமாறு ஏ.ஆர்.ரஹ்மான் கோரியிருந்தார். இந்த நிலையில் அர்ஜூன் என்பவர் தான் ரூ.10 ஆயிரம் கொடுத்து டிக்கெட் எடுத்தும், அங்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் நிகழ்ச்சியை காண முடியவில்லை. இதனால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அர்ஜூனுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. 
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            