விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்டில் நடைபெறுவதாக இருந்தது. அன்றைய தினத்தில் மழை பெய்ததால் ஒத்திவைக்கப்பட்டு செப்டம்பர் 10ம் தேதி அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான பொறுப்பு சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் உள்ளே கூட செல்ல முடியாமல் வெளியிலேயே நிறுத்தப்பட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோல்டு, பிளாட்டினம், சில்வர் என பல ஆயிரம் மதிப்பு கொண்ட டிக்கெட் வாங்கிய பலரும் இசை நிகழ்ச்சியை பார்க்காமல் வீடு திரும்பியதாக குற்றம்சாட்டினர்.
இதனையடுத்து, டிக்கெட் வாங்கியும் உள்ளே நுழைய முடியாதவர்கள், டிக்கெட் பிரதியை குறிப்பிட்ட மெயில் ஐடிக்கு குறைகளை குறிப்பிட்டு அனுப்புமாறு ஏ.ஆர்.ரஹ்மான் கோரியிருந்தார். இந்த நிலையில் அர்ஜூன் என்பவர் தான் ரூ.10 ஆயிரம் கொடுத்து டிக்கெட் எடுத்தும், அங்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் நிகழ்ச்சியை காண முடியவில்லை. இதனால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அர்ஜூனுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.