கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் |

கேரள மக்களில் பெரும்பாலோர் முருக பக்தர்கள். குறிப்பாக பழனி முருக பக்தர்கள். கேரளாவின் அருகில் உள்ள செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி என்ற ஊரில் அமைந்துள்ளது. உயர்ந்த மலைகளை பின்னணியாக கொண்டு குன்றின் மீது அமைந்துள்ள இந்த கோவில் அந்த பகுதியில் மிகவும் பிரபலம்.
இந்த கோவிலுக்கு நேற்று மோகன்லால் திடீரென வருகை தந்தார். நேராக கோவிலுக்கு சென்ற அவர் முருகனை வழிபட்டு தங்கவேலை காணிக்கையாக செலுத்தினார். எம்புரான், தொடரும் படங்களின் வெற்றி, மிகப்பெரிய வசூல் இவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தங்க வேல் காணிக்கையாக வழங்கி உள்ளார்.
'தொடரும்' படத்தின் பாடல் ஒன்றில் 'திருமலை முருகனுக்கு அரோகரா' என்ற வரி இடம் பெற்றிருந்தது. அந்த வரியை கேட்டதுமே திருமலை முருகனுக்கு காணிக்கை செலுத்த வேண்டும் என்று மோகன்லால் பட வெளியீட்டுக்கு முன்பே முடிவு செய்திருந்தாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.