சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

சந்தானம் நடித்த டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி போன்ற படங்களை இயக்கியவர் கார்த்திக் யோகி. இவர் அடுத்து இயக்கும் படத்தில் ரவிமோகன், எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு ‛ப்ரோ கோட்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதை ரவிமோகனே தயாரிக்கிறார். இதென்ன தலைப்பு என்று இயக்குனரிடம் கேட்டால் கதைக்கும், தலைப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. விரைவில் அதை சொல்வோம் என்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், ஒன்றல்ல இரண்டல்ல 4 ஹீரோயின்கள் இருக்கிறார்கள். அவர்கள் பெயர்கள் முறையாக அறிவிக்கப்படும். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், அனிமல், அர்ஜூன் ரெட்டி படங்களுக்கு இசையமைத்த ஹர்சவர்தன் ரமேஸ்வர் இசையமைக்கிறார். அவர் பின்னணி இசையிலும் மிரட்டுவார். செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறது. சந்தானத்தை வைத்து நான் இயக்கிய டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி படங்கள் கமர்ஷியலாக ஜெயித்தது. இதிலும் காமெடி இருக்கிறது. கூடுவே ஆக் ஷனும் இருக்கிறது'' என்கிறார்