பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

சந்தானம் நடித்த டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி போன்ற படங்களை இயக்கியவர் கார்த்திக் யோகி. இவர் அடுத்து இயக்கும் படத்தில் ரவிமோகன், எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு ‛ப்ரோ கோட்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதை ரவிமோகனே தயாரிக்கிறார். இதென்ன தலைப்பு என்று இயக்குனரிடம் கேட்டால் கதைக்கும், தலைப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. விரைவில் அதை சொல்வோம் என்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், ஒன்றல்ல இரண்டல்ல 4 ஹீரோயின்கள் இருக்கிறார்கள். அவர்கள் பெயர்கள் முறையாக அறிவிக்கப்படும். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், அனிமல், அர்ஜூன் ரெட்டி படங்களுக்கு இசையமைத்த ஹர்சவர்தன் ரமேஸ்வர் இசையமைக்கிறார். அவர் பின்னணி இசையிலும் மிரட்டுவார். செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறது. சந்தானத்தை வைத்து நான் இயக்கிய டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி படங்கள் கமர்ஷியலாக ஜெயித்தது. இதிலும் காமெடி இருக்கிறது. கூடுவே ஆக் ஷனும் இருக்கிறது'' என்கிறார்