தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ மாரி செல்வராஜ்? | தாய் கிழவி : சிங்கம் புலி நடிப்பை பாராட்டிய கமல் | தெலுங்கு, தமிழ் கலாசாரத்துடன் இணைந்திருக்கிறேன்! ஜான்வி கபூர் | போர் முழக்கம் : வடிவேலுவின் புதிய படம் | கமல் - ரஜினி இணையும் படம் குறித்து அனிருத் வெளியிட்ட அப்டேட்! | விஜய் சேதுபதியை இயக்கும் அஜித் பட இயக்குனர்! | போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் |

சந்தானம் நடித்த டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி போன்ற படங்களை இயக்கியவர் கார்த்திக் யோகி. இவர் அடுத்து இயக்கும் படத்தில் ரவிமோகன், எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு ‛ப்ரோ கோட்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதை ரவிமோகனே தயாரிக்கிறார். இதென்ன தலைப்பு என்று இயக்குனரிடம் கேட்டால் கதைக்கும், தலைப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. விரைவில் அதை சொல்வோம் என்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், ஒன்றல்ல இரண்டல்ல 4 ஹீரோயின்கள் இருக்கிறார்கள். அவர்கள் பெயர்கள் முறையாக அறிவிக்கப்படும். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், அனிமல், அர்ஜூன் ரெட்டி படங்களுக்கு இசையமைத்த ஹர்சவர்தன் ரமேஸ்வர் இசையமைக்கிறார். அவர் பின்னணி இசையிலும் மிரட்டுவார். செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறது. சந்தானத்தை வைத்து நான் இயக்கிய டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி படங்கள் கமர்ஷியலாக ஜெயித்தது. இதிலும் காமெடி இருக்கிறது. கூடுவே ஆக் ஷனும் இருக்கிறது'' என்கிறார்




