லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு |
மலையாள திரையுலகில் மோகன்லால் பிரியதர்ஷன் கூட்டணியில் மிகப் பிரம்மாண்டமான வரலாற்றுப் படமாக உருவாகியுள்ளது மரைக்கார் ; அரபிக்கடலின்டே சிம்ஹம். அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, கீர்த்தி சுரேஷ், மஞ்சுவாரியர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் கிட்டத்தட்ட 80 கோடி செலவில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த படம் தியேட்டர்களில் வெளியானால் தான் ரசிகர்களின் பார்வைக்கு விருந்தாகும் என்பதால் ஒடிடியில் வெளியிடாமல் இதன் ரிலீஸை தள்ளிப் போட்டு வந்தார் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர்.
ஆனால் தற்போது கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் கூட, 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்கிற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மரைக்கார் வெளியாகும் அதே நாளில் மற்ற படங்களும் வெளியானால் எதிர்பார்த்த எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்காது என்பதுடன் வசூலிலும் பெரிய நஷ்டம் ஏற்படும் என்பதால் தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்யும் எண்ணத்தை மாற்றிக்கொண்டார் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர்.
அவரது இந்த முடிவு தியேட்டர்காரர்கள் மத்தியில் சலசலப்பையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. கேரள மாநில செய்தித்துறை அமைச்சர் ஷாஜி செரியன் இந்த விஷயத்தில் தலையிட்டு தற்போது சமரசம் ஏற்படுத்தியுள்ளார். அதன்படி மரைக்கார் திரைப்படம் வரும் டிசம்பர் இரண்டாம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்றும், அதன் பின்னரே ஓடிடியில் ரிலீஸாகும் என்றும் சமரச முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்றபடி மரைக்கார் ரிலீஸில் சில சலுகைகள் அளிக்கப்படும் என சொல்லப்படுகிறது
இது குறித்து அமைச்சர் ஷாஜி செரியன் கூறும்போது, தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் இந்த முடிவை எடுத்ததன் மூலம் மிகப்பெரிய தியாகம் செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.