போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தமிழில் பாணா காத்தாடி, விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ படங்களில் நடித்த சமந்தா இப்போது கெளதம் மேனன் இயக்கிய நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்த பிறகு கோலிவுட்டின் இளவட்ட ஹீரோக்களை சுண்டியிழுத்து விட்டார். படம் சரியில்லை என்று ரசிகர்கள் ஜட்ஜ்மெண்ட் கொடுக்க, சமந்தா சரியாகத்தான் நடித்திருக்கிறார். அவரது அழகு, நடிப்புக்காகவே படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். அத்தனை க்யூட்டாக இருக்கிறார் என்று சில இளவட்ட நடிகர்கள் சமந்தாவின் அழகை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
இன்னும் சிலர் ஒருபடிமேலே சென்று, சமந்தாவை தொடர்பு கொண்டே புகழுரைகளை அள்ளி விட்டு வருகிறார்களாம். இதனால் முதலில் படம் வெற்றி பெறாமல் ஏமாற்றி விட்டதே என்ற மனக்கவலையில் இருந்த சமந்தா, இபபோது மனசு நிறைய சந்தோசத்தில் இருக்கிறார். காரணம், அவரது பர்பாமென்ஸை புகழ்ந்த இளவட்ட நடிகர்கள், அடுத்தடுத்து தங்களது படங்களில் கட்டாயம் நடிக்க வேண்டும் என்று அன்புக்கட்டளை போட்டிருக்கிறார்களாம். அதனால் கடல், ஐ படங்களில் நடிக்க இயலாமல் போன இழப்பை ஈடுசெய்ய புதிய தமிழ் படங்களில் கமிட்டாக வேகமாக தயாராகி வருகிறார் சமந்தா.