இளையராஜாவின் பெயரில் விருது வழங்கப்படும்; பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | இளையராஜாவிற்கு பாராட்டு விழா : அரங்கம் அதிர இன்னிசை மழை ; முதல்வர், ரஜினி, கமல் பங்கேற்பு | நான் சரியான வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கிறேன் : தமன்னா | கருவிலே உயிர் உருவாகும்போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது : ஜாய் கிரிசில்டா பதிவு | ‛‛நான் தான் சிஎம்'' : பார்த்திபன் வெளியிட்ட அறிவிப்பு | சேதுராஜன் ஐபிஎஸ் : மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபுதேவா | மீண்டும் ஒரு சர்வைவல் திரில்லரில் நடிக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரின் அரசியல் படத்தில் கைகோர்த்த நிவின்பாலி | ஹன்சிகா மீது பதியப்பட்ட எப்ஐஆரை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இளையராஜா இசையில் உருவாகும் ஈழத்தமிழ் படம் |
சைரா நரசிம ரெட்டி படத்திற்கு பிறகு சிரஞ்சீவி நடிப்பில் அடுத்த படம் வெளியாவதற்கு தான் இடைவெளி ஏற்பட்டுள்ளதே தவிர, அவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை கணிசமாகத்தான் இருக்கிறது. கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஆச்சார்யா படத்தில் நடித்து முடித்துவிட்ட சிரஞ்சீவி, தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் மலையாள லூசிபர் ரீமேக்காக உருவாகும் காட்பாதர் படத்தில் நடித்து வருகிறார்.
இன்னொரு பக்கம் அஜித்தின் வேதாளம் பட ரீமேக்கான போலோ சங்கர் படத்திலும் நடிக்கிறார். இந்தநிலையில் அவரது 154வது படமும் நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இந்தப்படத்தை பாபி என்பவர் இயக்குகிறார். இந்த படஹ்தின் துவக்க விழா பூஜையில் கலந்துகொண்ட இயக்குனர் வி.வி,விநாயக் கிளாப் அடித்து துவங்கி வைக்க, கேமராவை இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஸ்விட்ச் ஆன் பண்ண, முதல் காட்சியை ராகவேந்திரா ராவ் இயக்கினார். இந்தப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.