ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'டாக்டர்'. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் அவரது முந்தைய படம் போலவே பிளாக் காமெடி வகையில் உருவானது.
கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசுக்கு தயாரான இப்படம் கொரானா நேரத்தில் பல்வேறு சிக்கலை சந்தித்தது. இதையடுத்து ஓடிடியில் வெளியாகும் என பல வதந்திகள் பரப்பப்பட்டது. ஆனால் இப்படத்தை திரையரங்கில்தான் வெளியாகும் என்று படக்குழு உறுதியாக இருந்தது. அதன்படி கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. காமெடியில் கலக்கியுள்ள இப்படத்தை குடும்ப குடும்பமாக பார்த்து வருகின்றனர்.
டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் நூறு கோடிக்கு மேல் வசூல் பெற்று சாதனை படைத்தது. டாக்டர் படத்தின் அபார வெற்றியால் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை 30 கோடியாக உயர்த்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யாவுக்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் இடம் பெற்றூவிட்டார்.