சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு |
டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில சூர்யா நடித்துள்ள படம் ஜெய் பீம். சூர்யா முக்கியத்துவம் வாய்ந்த வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் நாளை(நவ., 2) ஓடிடியில் வெளியாகிறது.
இந்த நிலையில் ஜெய்பீம் படத்தை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், பார்வையாளர்களின் மனதில் தாக்கத்தையும், அதன் விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவது தான் சிறந்ததொரு கலைப்படைப்பு. நேற்று நண்பர் சூர்யா வழக்கறிஞராக வாழ்ந்துள்ள ஜெய்பீம் திரைப் படத்தைப் பார்த்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்தியுள்ள அதிர்வுகள் ஏராளம் என்று பதிவிட்டுள்ளார்.
அதையடுத்து சூர்யா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உணர்வுப் பூர்வமான பாராட்டு ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது. ஜெய்பீம் படக்குழுவினர் அனைவர் சார்பாகவும் நமது தமிழக முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் என்று பதிவிட்டுள்ளார்.