Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புனித் ராஜ்குமாரின் கண்களால் நான்கு பேருக்கு கிடைத்த பார்வை

01 நவ, 2021 - 17:18 IST
எழுத்தின் அளவு:
Puneeth-Rajkumar-eye-donated-to-four-people

பெங்களூரு : மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் இரண்டு கண்கள் மூலம், நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி செய்யப்பட்ட அறுவை சிகிச்சையால் நான்கு பேருக்கு பார்வை கிடைத்துள்ளது.

கன்னட முன்னணி சினிமா நடிகர் புனித் ராஜ்குமார் அக்டோபர் 29ல் மாரடைப்பால் காலமானார். அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், ரசிகர்கள் என லட்சக்கணக்கான பேர் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நேற்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. புனித் தனது இரு கண்களை தானமாக வழங்கி இருந்தார்.




தானமாக வழங்கப்பட்ட அவரின் கண்களை நாராயண நேத்ராலயா மருத்துவமனை தலைவர் புஜங்கஷெட்டி மருத்துவமனைக்கு எடுத்து சென்றார். வழக்கமாக இருவருக்கு தான் பொருத்த முடியும். ஆனால், புனித் கண்களால் நான்கு பேருக்கு பார்வை கிடைத்துள்ளது.

இது குறித்து புஜங்கஷெட்டி நேற்று கூறியதாவது: இரண்டு கண்கள், இருவருக்கு தான் பொருத்தப்படும். ஆனால், புனித்தின் கண்கள் நவீன தொழில்நுட்பம் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நால்வருக்கு பொருத்தியுள்ளோம். அதாவது ஒவ்வொரு கண்ணையும் இரண்டாக வெட்டினோம். கார்னியா எனப்படும் விழிப்படலம் முன்பகுதி, பின்பகுதியாக தனி தனியாக பிரிக்கப்பட்டது. முன் பகுதி விழிப்படலம் இருவருக்கும்; பின் பகுதி விழிப்படலம் இருவருக்கும் பொருத்தினோம்.




நாங்கள் மேற்கொண்ட முயற்சியே வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியாக உள்ளோம். புனித்தின் இரு கண்களும் ஆரோக்கியமாக இருந்ததால் தான் இது சாத்தியமாயிற்று. கண்கள் பொருத்தி கொண்டவர்களும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர். ஒரு பெண், மூன்று ஆண்கள் என நான்கு பேரும் கர்நாடகாவை சேர்ந்த இளம் வயதினர் என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 30 ல், நாள் முழுவதும் மருத்துவர்கள் தீவிர முயற்சியால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ராஜ்குமாரும், அவரது மனைவி பர்வதம்மாவும் 1994ல், முதல் முறையாக நாராயணா நேத்ராலயாவில் கண் தான வங்கி துவக்கி வைத்தனர். 2006ல், ராஜ்குமார் இறந்த போது அவரது கண்களும்; 2017ல் பர்வதம்மா இறந்த போது அவரது கண்களும் தானம் செய்யப்பட்டது. பெற்றோர் போன்று புனித்தும் கண்களை தானம் செய்தார். அவர்கள் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
இருளர் இன மக்களுக்காக ரூ.1 கோடி நிதி அளித்த சூர்யாஇருளர் இன மக்களுக்காக ரூ.1 கோடி நிதி ... ஜெய்பீம் படத்தை பாராட்டிய முதல்வர் : நன்றி கூறிய சூர்யா ஜெய்பீம் படத்தை பாராட்டிய முதல்வர் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Shiva -  ( Posted via: Dinamalar Android App )
02 நவ, 2021 - 10:24 Report Abuse
Shiva புல்லரிக்குது.... இதுதான் சிறந்த தானம்...
Rate this:
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
02 நவ, 2021 - 09:57 Report Abuse
N Annamalai அருமை பாராட்டப்பட வேண்டிய செயல் .திரு புனீத் ராஜ்குமார் அவர்களுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் இதை செய்து முடித்ஹ மருத்துவர் குழுவிற்கும் எங்கள் வாழ்த்துக்கள் பாராட்டுகள் . வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்க படும் .இவர் தெய்வத்துள் வைக்க படுவார் .
Rate this:
Raman - kottambatti,இந்தியா
02 நவ, 2021 - 05:43 Report Abuse
Raman இது புதுமை. ரொம்ப சிறப்பு.. நல்லவர் கண்களை நாலுபேருக்கு என்ன நாற்பது பேருக்கு கூட கொடுக்கலாம்.. செய்த புண்ணியம் அப்படி..
Rate this:
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
01 நவ, 2021 - 19:52 Report Abuse
Ramesh Sargam தமிழ் நாட்டு நடிகர்கள் யாராவது இப்படி ஏதாவது தானம் செய்துள்ளார்களா? புனித் இறந்தபிறகுதான் அவர் செய்த பல நல்ல விஷயங்கள் நமக்கு தெரியவருகின்றன. விளம்பரம் தேடிக்கொள்ளாத ஒரு சிறந்த மனிதர் புனித்.
Rate this:
SureshKumar Dakshinamurthy - Chennai,இந்தியா
02 நவ, 2021 - 09:27Report Abuse
SureshKumar Dakshinamurthyநடிகர்களை விடுங்க - கருணாநிதி இறந்த பிறகு வீட்டை மருத்துவமனை ஆக்குவேன் என சொன்னார் - அத செய்ய கூட மனசில்லை....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in