Advertisement

சிறப்புச்செய்திகள்

தாத்தா ஆனார் பிரியதர்ஷன் : கல்யாணியின் பிறந்தநாளில் வெளிப்பட்ட உண்மை | இரண்டு மாதத்திற்கு பிறகு ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் கணக்கு மீட்பு | ஷாருக்கான் மகளுக்கு அம்மாவாக நடிக்கும் தீபிகா படுகோன் | பின்சீட்டில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணியுங்கள் : சோனு சூட் உருக்கமான வேண்டுகோள் | ''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெற்றோர் நினைவிடம் அருகேயே நடிகர் புனித் ராஜ்குமார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

31 அக், 2021 - 10:19 IST
எழுத்தின் அளவு:
Puneeth-Rajkumar-Funeral

மறைந்த கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் முழு மரியாதையுடன் பெங்களூருவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.


கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமார், 46, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 29ம் தேதி பெங்களூருவில் காலமானார். அவரது உடல் கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் பொது மக்கள் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். மைதானத்தின் வெளிபுறத்தில் 5 கி.மீ., தூரம் வரை ரசிகர்கள் வரிசையில் காத்திருந்தனர். தமிழ் நடிகர்கள் சரத்குமார், பிரபுதேவா, அர்ஜுன், தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா, ஜீனியர் என்.டி.ஆர்., உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.



உயர்கல்வி படிக்க சென்ற புனித் மூத்த மகள் திரிதி நேற்று மாலை அமெரிக்காவிலிருந்து பெங்களூரு திரும்பினார். தந்தையின் உடலைப் பார்த்து கதறி அழுதார். புனித் தந்தை ராஜ்குமார், தாய் பர்வதம்மா ஆகியோரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஸ்ரீ கன்டீரவா ஸ்டுடியோ அருகிலேயே புனித் உடல் இன்று காலை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில், முதல்வர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ரசிகர்கள் மழையிலும், பனியிலும் ரசிகர்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.



சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவராக அறியப்பட்டவர் ராஜ்குமார். இந்த நிலையில் அவர் மறைந்த பிறகு அவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. அவரது தந்தை ராஜ்குமாரின் பெயரில் இயங்கி வரும் அறக்கட்டளைக்கு அவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இயக்குனராகும் கார்த்தி, ஜோதிகாவுடன் இணைவது எப்போது? - சூர்யா பதில்கள்இயக்குனராகும் கார்த்தி, ஜோதிகாவுடன் ... புனித் ராஜ்குமாருக்காக மோட்ச தீபம் ஏற்றி வழிபட்ட இளையராஜா புனித் ராஜ்குமாருக்காக மோட்ச தீபம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Good Bad Ugly
    • குட் பேட் அக்லி
    • நடிகர் : அஜித் குமார் ,பிரசன்னா
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :ஆதிக் ரவிச்சந்திரன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,பிரசன்னா,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in