கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
தமிழ் சினிமாவில் நட்சத்திர குடும்பம் என்றால் சூர்யா குடும்பம் தான். சிவகுமார், சூர்யா, ஜோதிகா, கார்த்தி என 4 நடிகர்கள் உள்ளனர். சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் ஜெய் பீம் படத்துக்காக சூர்யா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் சூர்யாவிடம் இயக்குனராக வாய்ப்பு உள்ளதா? என்று கேட்தற்கு “இயக்குனர் ஆவது பற்றி எனக்கு தெரியாது .. கார்த்தி கூட எதிர்காலத்தில் இயக்குனர் ஆகலாம்.. எப்போது பார்த்தாலும் நான் ஒரு கதை எழுதுகிறேன் .. இதுபற்றி ஆய்வு பண்ணுகிறேன் என்று சொல்லிக் கொண்டிருப்பான்.. கார்த்திக் இயக்குனர் ஆவதற்கு வாய்ப்பு உண்டு. அதேபோல் ஜோதிகா கூட நிறைய ஐடியா வைத்திருக்கிறார். அவர் இயக்குனர் ஆவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. சாத்தியம் இருக்கிறது. நான் நடிப்பதிலும் தயாரிப்பிலும் சந்தோஷமாக இருக்கிறேன்!” என்று சூர்யா கூறி இருக்கிறார்.
ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்து சூர்யா எப்போது நடிப்பார் என்கிற கேட்டபோது, ஒரு வார்த்தையில் பதில் சொன்ன சூர்யா, “ஸ்கிரிப்ட் .. ஸ்கிரிப்ட் வரவேண்டும் ஜோடியாக எல்லாவிதமான கதைகளும் பண்ணிவிட்டோம். அடுத்து வேறு ஒரு பரிமாணத்திலான கதை கிடைத்தால் பண்ணலாம் என்று காத்திருக்கிறோம். நிச்சயமாக அப்படி ஒரு படம் பண்ணுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இந்த தோற்றம் மற்றும் வயதில் இணைந்து என்ன படம் பண்ணினால் நல்லா இருக்கும் என்று பார்த்து அதன்படி பண்ணுவோம்” என்று தெரிவித்துள்ளார்.