'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
தமிழ் சினிமாவில் நட்சத்திர குடும்பம் என்றால் சூர்யா குடும்பம் தான். சிவகுமார், சூர்யா, ஜோதிகா, கார்த்தி என 4 நடிகர்கள் உள்ளனர். சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் ஜெய் பீம் படத்துக்காக சூர்யா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் சூர்யாவிடம் இயக்குனராக வாய்ப்பு உள்ளதா? என்று கேட்தற்கு “இயக்குனர் ஆவது பற்றி எனக்கு தெரியாது .. கார்த்தி கூட எதிர்காலத்தில் இயக்குனர் ஆகலாம்.. எப்போது பார்த்தாலும் நான் ஒரு கதை எழுதுகிறேன் .. இதுபற்றி ஆய்வு பண்ணுகிறேன் என்று சொல்லிக் கொண்டிருப்பான்.. கார்த்திக் இயக்குனர் ஆவதற்கு வாய்ப்பு உண்டு. அதேபோல் ஜோதிகா கூட நிறைய ஐடியா வைத்திருக்கிறார். அவர் இயக்குனர் ஆவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. சாத்தியம் இருக்கிறது. நான் நடிப்பதிலும் தயாரிப்பிலும் சந்தோஷமாக இருக்கிறேன்!” என்று சூர்யா கூறி இருக்கிறார்.
ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்து சூர்யா எப்போது நடிப்பார் என்கிற கேட்டபோது, ஒரு வார்த்தையில் பதில் சொன்ன சூர்யா, “ஸ்கிரிப்ட் .. ஸ்கிரிப்ட் வரவேண்டும் ஜோடியாக எல்லாவிதமான கதைகளும் பண்ணிவிட்டோம். அடுத்து வேறு ஒரு பரிமாணத்திலான கதை கிடைத்தால் பண்ணலாம் என்று காத்திருக்கிறோம். நிச்சயமாக அப்படி ஒரு படம் பண்ணுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இந்த தோற்றம் மற்றும் வயதில் இணைந்து என்ன படம் பண்ணினால் நல்லா இருக்கும் என்று பார்த்து அதன்படி பண்ணுவோம்” என்று தெரிவித்துள்ளார்.