ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ், தெலுங்கில் ஆரம்பமான டிவி நிகழ்ச்சி மாஸ்டர் செப். தமிழில் நடிகர் விஜய் சேதுபதியும், தெலுங்கில் நடிகை தமன்னாவும் தொகுத்து வழங்க ஆரம்பித்தார்கள். நிகழ்ச்சி சில வாரங்கள் ஒளிபரப்பான பிறகு தெலுங்கு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்த தமன்னா, நிகழ்ச்சியிலிருந்து விலகினார். மேலும், சில காரணங்களால் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மீது தமன்னா வழக்கு தொடரவும் முடிவு செய்தார்.
இந்நிலையில் தமன்னாவுக்குப் பதிலாக தெலுங்கு நடிகை அனசுயா பரத்வாஜ் நேற்று முதுல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஆரம்பித்துள்ளார். இது குறித்து நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில், “நீங்கள் வாருங்கள், நான் சம்பாதிக்கிறேன், நீங்கள் கிசுகிசு செய்யுங்கள், நான் பாஸ் ஆகிறேன்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமன்னா தொகுத்து வழங்கிய போது ரேட்டிங் சரியாக இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது, தற்போது அனசுயா தொகுத்து வழங்குவது எப்படி இருக்கப் போகிறது என்பது இனிமேல்தான் தெரியும்.