இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை தேறி வருவதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினி நேற்று (அக்.,28) இரவு 8:30 மணி அளவில், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‛அவர் நலமுடன் உள்ளார். விரைவில் வீடு திரும்புவார் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், ரஜினியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தலைசுற்றல் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர பரிசோதனை செய்தனர். அவருக்கு ‛கரோடிட் அர்ட்டரி ரீவேஸ்குலரைசேஷன் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைக்கு பிறகு ரஜினிகாந்த் உடல்நலம் தேறி வருகிறார். சிகிச்சை முடிந்து இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.