ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சென்னை: நடிகர் ரஜினிகாந்த்(71) நேற்றிரவு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு என்ன மாதிரியான பிரச்னை என்பதை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நடிகர் ரஜினியின் திரையுலக சேவையை பாராட்டி, மத்திய அரசு அவருக்கு மிக உயரிய விருதான, தாதா சாஹேப் பால்கே விருதை அறிவித்தது. கடந்த 25ம் தேதி டில்லியில் நடந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கையால் விருது பெற்றுக் கொண்டார் ரஜினி. நேற்று முன்தினம் சென்னை திரும்பிய அவர் தனது பேரன்கள் மற்றும் குடும்பத்தினர் உடன் அண்ணாத்த படத்தை பார்த்தார். ‛‛அண்ணாத்த படத்தை தன்னை விட தனது பேரன் வேத் மிகவும் ரசித்ததாக ரஜினி நேற்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு 8:30 மணி அளவில் திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இத்தகவல், ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கமான முழு உடல் பரிசோதனைக்காக ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நலமுடன் உள்ளார். இன்று வீடு திரும்புவார் என, அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.