ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சென்னை:நடிகர் ரஜினிகாந்த், 71, நேற்றிரவு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நடிகர் ரஜினியின் திரையுலக சேவையை பாராட்டி, மத்திய அரசு அவருக்கு மிக உயரிய விருதான, 'தாதா சாஹேப் பால்கே' விருதை அறிவித்தது. கடந்த 25ம் தேதி டில்லியில் நடந்த விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருதை வழங்கி கவுரவித்தார்.அதன்பின், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரை ரஜினி சந்தித்து வாழ்த்து பெற்றார். டில்லி பயணத்தை முடித்து, ரஜினி நேற்று முன்தினம் சென்னை திரும்பினார்.
இந்நிலையில், நேற்று இரவு 8:30 மணி அளவில், திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இத்தகவல், ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.'முழு உடல் பரிசோதனைக்காக, ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நலமுடன் உள்ளார். இன்று வீடு திரும்புவார்' என, அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதே நேரம், ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டம் தடைபட்டதாகவும்; ஏற்கனவே மாற்றப்பட்ட சிறுநீரகத்தின் செயல் திறன் திடீரென குறைந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இருப்பினும், மருத்துவமனை தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.