பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சென்னை: '' ஜனாதிபதியையும் ,பிரதமரையும் சந்தித்தது மகிழ்ச்சி'' என தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.
டில்லியில் நேற்று முன்தினம் நடந்த 67வது தேசிய விருது வழங்கும் விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருதை வழங்கி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கவுரவித்தார். இந்த விருதை என் குருவும், வழிகாட்டியுமான பாலச்சந்தருக்கு சமர்ப்பிக்கிறேன், என ரஜினி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ரஜினி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: மதிப்பிற்குரிய ஜனாதிபதியையும், பிரதமரையும் சந்தித்து வாழ்த்து பெற்றதில் பெரும் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களையும் ,பிரதமர் அவர்களையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி. pic.twitter.com/0pFheNjnFd
— Rajinikanth (@rajinikanth) October 27, 2021