லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 15ம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அதையடுத்து மீடியாக்களை சந்தித்து பொதுமக்கள் அனைவரும் அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால் தடுப்பூசி போட்டுக் கொண்ட அடுத்தநாள் அவர் மாரடைப்பால் மரணமடைந்தார். இதனால் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் விவேக் மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை அப்போது மருத்துவக்குழு மறுத்தது.
அதோடு, தேசிய மனித உரிமை ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த ஆணையம் விவேக் மரணம் குறித்த ஆய்வு அறிக்கை கேட்டு மத்திய சுகாதாரத் துறைக்கு கடிதம் எழுதியது. இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா தடுப்பூசி காரணமாக நடிகர் விவேக் மரணமடையவில்லை. உயர் ரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருப்பதாக மருத்துவக்குழு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.