சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 15ம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அதையடுத்து மீடியாக்களை சந்தித்து பொதுமக்கள் அனைவரும் அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால் தடுப்பூசி போட்டுக் கொண்ட அடுத்தநாள் அவர் மாரடைப்பால் மரணமடைந்தார். இதனால் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் விவேக் மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை அப்போது மருத்துவக்குழு மறுத்தது.
அதோடு, தேசிய மனித உரிமை ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த ஆணையம் விவேக் மரணம் குறித்த ஆய்வு அறிக்கை கேட்டு மத்திய சுகாதாரத் துறைக்கு கடிதம் எழுதியது. இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா தடுப்பூசி காரணமாக நடிகர் விவேக் மரணமடையவில்லை. உயர் ரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருப்பதாக மருத்துவக்குழு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.