சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
தமிழ் பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நமீதா மாரிமுத்து, திடீரென நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான அவரது வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸில் கலந்து கொண்ட நமீதா மாரிமுத்துவின் சோக கதை சக போட்டியாளர்கள் உள்பட ரசிகர்களையும் வருத்தம் கொள்ள செய்தது. அதன் காரணமாக அவருக்கு மக்களின் ஆதரவும் அதிகரித்தது. பிக்பாஸ் வீட்டில் நமீதா முக்கிய போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அதற்கு காரணம் அவரது உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்து வருகிறார் என சொல்லப்பட்டது. மேலும் அவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டினுள் செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ள நமீதா தன்னுடைய முதல் வீடியோவை பதிவேற்றியுள்ளார். அதில் ஏழை குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கிக் கொடுத்து நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போதே சமூக நல அக்கறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசிய நமீதா மாரிமுத்து அவற்றை தொடர்ந்து செய்து வருகிறார். இதனை பார்க்கும் ரசிகர்கள் நமீதாவின் இந்த அறப்பணிகளை வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர்.