2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

தமிழ் பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நமீதா மாரிமுத்து, திடீரென நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான அவரது வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸில் கலந்து கொண்ட நமீதா மாரிமுத்துவின் சோக கதை சக போட்டியாளர்கள் உள்பட ரசிகர்களையும் வருத்தம் கொள்ள செய்தது. அதன் காரணமாக அவருக்கு மக்களின் ஆதரவும் அதிகரித்தது. பிக்பாஸ் வீட்டில் நமீதா முக்கிய போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அதற்கு காரணம் அவரது உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்து வருகிறார் என சொல்லப்பட்டது. மேலும் அவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டினுள் செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ள நமீதா தன்னுடைய முதல் வீடியோவை பதிவேற்றியுள்ளார். அதில் ஏழை குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கிக் கொடுத்து நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போதே சமூக நல அக்கறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசிய நமீதா மாரிமுத்து அவற்றை தொடர்ந்து செய்து வருகிறார். இதனை பார்க்கும் ரசிகர்கள் நமீதாவின் இந்த அறப்பணிகளை வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர்.