செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு |
கடந்த சில வருடங்களுக்கு முன் விஜய் படங்களில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை அடுத்தடுத்து பெற்று முன்னணி நாயகி வரிசைக்கு உயர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதே சமயத்தில் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி உருவான மகாநடி படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார்.
அந்தப்படம் கொடுத்த நம்பிக்கையில் அடுத்ததாக கதாநாயகர்களுடன் டூயட் பாடுவதை விட கதையின் நாயகியாக தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக பார்த்து தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார். ஆனால் அப்படி அவர் நடித்த பென்குயின், மிஸ் இந்தியா ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்தன. இதே பாணியில் விளையாட்டு வீராங்கனையாக அவர் நடித்துள்ள குட்லக் சகி படத்திலும் நடித்துள்ளார். இந்தப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்த வயதிலேயே நாம் இப்படி கதையின் நாயகியை மையப்படுத்திய கதாபாத்திரங்களாக தொடர்ந்து நடிப்பது தவறு என்பதை புரிந்து விட்டாராம் கீர்த்தி சுரேஷ்.. இதையடுத்து இனி கொஞ்ச காலத்திற்கு முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக மட்டுமே நடிப்பது என முடிவு செய்துவிட்டாராம் கீர்த்தி சுரேஷ். அந்த வகையில் தற்போது மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக சர்க்காரு வாரி பாட்டா என்கிற படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது..