இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் சாகுந்தலா ஆகிய படங்களில் நடித்துள்ள சமந்தா அடுத்தபடியாக தமிழ் தெலுங்கில் தயாராகும் இரண்டு படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். அதோடு ஒரு ஹிந்தி படத்திலும் அவர் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் நாக சைதன்யாவை பிரிந்துவிட்ட சமந்தா தற்போது தான் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அதிலிருந்து விடுபட யோகா, தியானம் மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதோடு மன அழுத்தத்தில் இருந்து விடுபட செல்லப் பிராணிகளுடன் விளையாடி வருவதாகவும் தெரிவித்துள்ள சமந்தா, மன அழுத்தம் தொடர்ந்தால் தனது நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சமந்தாவின் இந்த பதிவை அடுத்து நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஆறுதலான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.