தீனா படத்திற்கு பிறகு மதராஸி படத்தில் வேண்டுதலை நிறைவேற்றிய ஏ.ஆர்.முருகதாஸ் | சிரஞ்சீவி - நயன்தாரா படக்குழுவை சந்தித்த விஜய் சேதுபதி படக்குழு | ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து அபிஷேக் பச்சன் வழக்கு: புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி மனு | மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே | என் அழகான ஜென்டில்மேன் நடிகரே : ரவி மோகனை வாழ்த்திய சுதா கெங்கரா! | நயன்தாரா ஆவணப்படம் வழக்கு : பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு | 2 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள மிடில் கிளாஸ் | அஜித் 64 படத்தை குறித்து புதிய தகவல் இதோ | மகுடம் பட பிரச்சனையை சுமூகமாக தீர்த்த விஷால் | சசி, விஜய் ஆண்டனி படத்தலைப்பு நூறுசாமி |
தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் சாகுந்தலா ஆகிய படங்களில் நடித்துள்ள சமந்தா அடுத்தபடியாக தமிழ் தெலுங்கில் தயாராகும் இரண்டு படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். அதோடு ஒரு ஹிந்தி படத்திலும் அவர் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் நாக சைதன்யாவை பிரிந்துவிட்ட சமந்தா தற்போது தான் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அதிலிருந்து விடுபட யோகா, தியானம் மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதோடு மன அழுத்தத்தில் இருந்து விடுபட செல்லப் பிராணிகளுடன் விளையாடி வருவதாகவும் தெரிவித்துள்ள சமந்தா, மன அழுத்தம் தொடர்ந்தால் தனது நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சமந்தாவின் இந்த பதிவை அடுத்து நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஆறுதலான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.