2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வருவது அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமல்ல என்று கூறியுள்ள கஸ்தூரி அந்த நிகழ்ச்சியை 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்துடன் ஒப்பிட்டு கிண்டலடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் பிக்பாஸின் முன்னாள் போட்டியாளரான கஸ்தூரி அந்த நிகழ்ச்சியை விமர்சித்து பதிவிட்டுள்ள டுவீட் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சனிக்கிழமையன்று அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனை தன்னைப் போலவே ஒரு எபிசோடு கூட முழுசா பார்க்காத நபர் யாராவது இருக்கிறீர்களா? அப்படி முழு எபிசோசடையும் பார்க்க முடியாதவர்களுக்கு என்னுடைய ஆறுதல் அரவணைப்பு' என்று பதிவிட்டு இருந்தார். மேலும் அந்த டுவீட்டில் ஸ்டார் விஜய், கம்பெனி ஆர்டிஸ்ட், 100 நாள் வேலைவாய்ப்புத்திட்டம் ஆகிய ஹாஷ்டேக்குகளை பதிவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை கம்பெனி ஆர்டிஸ்டுகளுக்கான 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் எனவும் கிண்டலடித்துள்ளார். இதற்கு சில ரசிகர்கள் 'அப்புறம் எதுக்கு மேடம் நீங்க பிக்பாஸ் போனீங்க' என கேள்வி எழுப்பி பதிலடி கொடுத்து வருகின்றனர்.
நடிகை கஸ்தூரி பிக்பாஸ் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் பிறகு தொலைக்காட்சி நிறுவனம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக தனக்கு பேசியபடி தொகையை கொடுக்கவில்லை என சர்ச்சையை கிளப்பினார்.