இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வருவது அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமல்ல என்று கூறியுள்ள கஸ்தூரி அந்த நிகழ்ச்சியை 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்துடன் ஒப்பிட்டு கிண்டலடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் பிக்பாஸின் முன்னாள் போட்டியாளரான கஸ்தூரி அந்த நிகழ்ச்சியை விமர்சித்து பதிவிட்டுள்ள டுவீட் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சனிக்கிழமையன்று அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனை தன்னைப் போலவே ஒரு எபிசோடு கூட முழுசா பார்க்காத நபர் யாராவது இருக்கிறீர்களா? அப்படி முழு எபிசோசடையும் பார்க்க முடியாதவர்களுக்கு என்னுடைய ஆறுதல் அரவணைப்பு' என்று பதிவிட்டு இருந்தார். மேலும் அந்த டுவீட்டில் ஸ்டார் விஜய், கம்பெனி ஆர்டிஸ்ட், 100 நாள் வேலைவாய்ப்புத்திட்டம் ஆகிய ஹாஷ்டேக்குகளை பதிவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை கம்பெனி ஆர்டிஸ்டுகளுக்கான 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் எனவும் கிண்டலடித்துள்ளார். இதற்கு சில ரசிகர்கள் 'அப்புறம் எதுக்கு மேடம் நீங்க பிக்பாஸ் போனீங்க' என கேள்வி எழுப்பி பதிலடி கொடுத்து வருகின்றனர்.
நடிகை கஸ்தூரி பிக்பாஸ் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் பிறகு தொலைக்காட்சி நிறுவனம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக தனக்கு பேசியபடி தொகையை கொடுக்கவில்லை என சர்ச்சையை கிளப்பினார்.