600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு முன்னதாகவே கமல்ஹாசனால் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டு பின் கைவிடப்பட்ட படம் மருதநாயகம். இங்கிலாந்து ராணி எலிசெபத் சென்னைக்கு வந்து இப்படத்தைத் துவக்கி வைத்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் அந்தப் படம் அத்துடன் நின்றுவிட்டது. அந்தப் படம் மட்டும் முழுமையாக உருவாகி வெளிவந்திருந்தால் பாகுபலி படங்களுக்கு முன்பே தமிழில் ஒரு பெரும் சரித்திர சாதனை நிகழ்ந்திருக்கும்.
மருதநாயகம் படத்தை எடுக்க கமல்ஹாசனுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது வானமாமலை எழுதிய தமிழர் நாட்டுப்பாடல்கள் என்ற புத்தகத்தில் இடம் பெற்றிருந்த கான்சாகிபு சண்டை என்ற பாடல் என்பது பிக் பாஸ் 5 மூலமாக வெளிவந்துள்ளது. நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் அந்தப் புத்தகம் பற்றி அறிமுகப்படுத்திய போது அது பற்றி கமல்ஹாசன் பகிர்ந்து கொண்டார்.