டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுக கட்சிக்கு நேற்று 50வது பிறந்த நாள். எம்.ஜி.ஆரால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவரும், அவருக்கு ஜேடியாக பல படங்களில் நடித்தவருமான லதா நேற்று சத்யா ஸ்டூடியோவில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் கூறியதாவது: 1972ல் இதே சத்யா ஸ்டுடியோவில் தான் எம்.ஜி.ஆர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை துவங்கினார். இன்று 49 ஆண்டுகள் நிறைவு பெற்று ஐம்பதாம் ஆண்டு பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைப்பது எனக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
எம்.ஜி.ஆர் அவர்களோடு நான் நடித்த முதல் படமான நேற்று இன்று நாளை படத்தின் படப்பிடிப்பு இதே சத்யா ஸ்டுடியோவில் தான் நடந்தது. அப்போதுதான் கட்சியை துவங்கினார். அதே சத்யா ஸ்டுடியோவில் இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
தொடர்ந்து தமிழக முதல்வராக இருந்து தமிழக மக்களுக்கு சிறப்பான ஆட்சியை வழங்கினார். அ.தி.மு.க வளர்ச்சி நிதிக்காக மதுரை, திருச்சி, கோவை, தேனி, பவானி போன்ற ஊர்களில் எனது கலைநிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் கிடைத்த ரூபாய் 35 லட்சத்தை எம்.ஜி.ஆர் அவர்களிடம் வழங்கியபோது ஒரு நடராஜர் சிலையை எனக்கு பரிசாக வழங்கியது இன்றும் என்னால் மறக்க முடியாதது.
அவர் ஆரம்பித்த கட்சி இன்னும் எவ்வளவு புயல்கள் வந்தாலும் தாங்கி நிற்கும், நிற்க வேண்டும் என்பதே எனது ஆசை. உலகம் முழுவதும் உள்ள எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இன்று என் மேல் அன்பு வைத்து நட்புடன் இருக்கிறார்கள், அதற்கு காரணம் நான் அவருக்கு ஜோடியாக நடித்ததால் மட்டுமல்ல கழகத்தின் மூத்த மூன்றாவது பெண் உறுப்பினர் என்பதாலும் தான். என்றார்.




