நூறுசாமி படப்பிடிப்பு நிறைவு : மே 1ல் ரிலீஸ் | என்னாலேயே என்னை புரிந்து கொள்ள முடியவில்லை : தமன்னா | கல்யாணியைப் போல அமலாபாலுக்கும் கை கொடுக்குமா டிராகுலா ஜானர் படம்? | ரங்தே பசந்தி 20ம் வருட நிறைவு : படக்குழுவினருடன் சேர்ந்து கொண்டாடிய அமீர்கான் | கார் விபத்தில் இளைஞர்கள் காயம் : நிற்காமல் சென்ற மலையாள நடிகர் கைதாகி ஜாமீனில் விடுதலை | ஜப்பானில் ரிலீஸாகும் ‛குபேரா' | அனிமேஷனில் தயாராகும் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் | ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள லக்கி பட டிரைலர் வெளியானது | கலைத்துறை வித்தகர் விருது : எம்.என் ராஜம் அரசுக்கு கோரிக்கை | சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: விசாரணைக்கு ஆஜராக ஜெயராமுக்கு சம்மன் |

கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு தியேட்டர்கள் ஆகஸ்ட் மாதக் கடைசியில் திறக்கப்பட்டன. ஆனால், முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாத காரணத்தால் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் அதிகம் வரவில்லை.
விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்த 'கோடியில் ஒருவன்' படத்திற்கு ஓரளவிற்கு ரசிகர்கள் வந்தனர். அதற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த 'டாக்டர்' படத்திற்கு அந்த எண்ணிக்கை அதிகமானது. அதை கடந்த வாரம் வெளிவந்த 'அரண்மனை 3' படமும் அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளது.
மேலே குறிப்பிட்ட மூன்று படங்களுக்குமே விமர்சன ரீதியாக பெரிய அளவில் வரவேற்பு இல்லை. இருந்தாலும் இப்படங்களுக்கு தியேட்டர்களில் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது.
கடந்த வாரம் ஆயுத பூஜை தினத்தன்று வெளிவந்த 'அரண்மனை 3' படம் அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வந்ததால் 4 நாட்களில் சுமார் 15 கோடி வரை வசூலித்தாக தகவல் வெளியாகி உள்ளது. 50 சதவீத இருக்கை அனுமதியில் இது பெரிய வசூல் என்கிறார்கள். நாளையும் விடுமுறை நாள் என்பதால் இன்னும் வசூல் கூடுதலாகலாம்.
'டாக்டர்' படத்தைத் தொடர்ந்து 'அரண்மனை 3' படமும் வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் லாபகரமான படமாக அமையும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.




