தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு தியேட்டர்கள் ஆகஸ்ட் மாதக் கடைசியில் திறக்கப்பட்டன. ஆனால், முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாத காரணத்தால் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் அதிகம் வரவில்லை.
விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்த 'கோடியில் ஒருவன்' படத்திற்கு ஓரளவிற்கு ரசிகர்கள் வந்தனர். அதற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த 'டாக்டர்' படத்திற்கு அந்த எண்ணிக்கை அதிகமானது. அதை கடந்த வாரம் வெளிவந்த 'அரண்மனை 3' படமும் அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளது.
மேலே குறிப்பிட்ட மூன்று படங்களுக்குமே விமர்சன ரீதியாக பெரிய அளவில் வரவேற்பு இல்லை. இருந்தாலும் இப்படங்களுக்கு தியேட்டர்களில் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது.
கடந்த வாரம் ஆயுத பூஜை தினத்தன்று வெளிவந்த 'அரண்மனை 3' படம் அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வந்ததால் 4 நாட்களில் சுமார் 15 கோடி வரை வசூலித்தாக தகவல் வெளியாகி உள்ளது. 50 சதவீத இருக்கை அனுமதியில் இது பெரிய வசூல் என்கிறார்கள். நாளையும் விடுமுறை நாள் என்பதால் இன்னும் வசூல் கூடுதலாகலாம்.
'டாக்டர்' படத்தைத் தொடர்ந்து 'அரண்மனை 3' படமும் வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் லாபகரமான படமாக அமையும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.