ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' | 'கேம் ஆப் த்ரோன்ஸ்' புதிய தொடர் வெளியானது: உலகம் முழுக்க வரவேற்பு | 'மாஸ்டர் பிளான்' படத்தில் பொலிட்டிக்கல் பிளாக் காமெடி | வில்லனாக நடிக்க விரும்பும் முனீஷ்காந்த் | பிளாஷ்பேக்: 'நிழல்கள்' ராதுவை தெரியுமா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 பேருக்கு வாழ்வளித்த கண்ணதாசன் |

நடிகர் விஜய் உடன் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், விஜய்யின் அரசியல் வருகைக்கான பேச்சுவார்த்தையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள அவர் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், உள்ளாட்சி தேர்தல் மூலம் விஜய் தனது தொண்டர்களுக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார். அடுத்து வரப் போகும் தேர்தலிலும் பச்சைக் கொடி காட்டினால் எல்லாம் நடக்கும் என்று கூறியுள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் விஜய் நேரடி அரசியலுக்கு வரக்கூடாது. தமிழக மக்கள் அவரை உச்சத்தில் கொண்டு போய் வைத்திருக்கின்றனர். அதனை சிறிது காலம் அவர் அனுபவிக்க வேண்டும் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தாம் சிறு பாதை போட்டுக் கொடுத்ததாகவும், அதை மிகப்பெரிய நெடுஞ்சாலையாக விஜய் மாற்றிக் கொண்டார் என்றும் அவர் பெருமிதத்துடன் கூறியுள்ளார். எதிர்காலத்தில் விஜய் தன்னைவிட வேகமாக அரசியல் குறித்து முடிவெடுப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் விஜய் படங்களுக்கு சிக்கல் ஏற்பட்ட நிலையில் தற்போது திமுக ஆட்சியில் அதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாது என்று நம்புவதாகவும், ஏனென்றால் தற்போதைய ஆட்சி பழிவாங்கும் ஆட்சி இல்லை எனவும் எஸ்.ஏ.சந்திர சேகர் கூறியுள்ளார்.
சமீபத்தில் கூட விஜய் தன்னை அழைத்து ஒருமணி நேரம் பேசினார். அப்போது சில பொதுவான விஷயங்களை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் என்று எஸ்ஏசி சூசகமாக தெரிவித்துள்ளார்.




