சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரும், சிரஞ்சீவியின் உறவினருமான நடிகர் சாய் தரம் தேஜ், கடந்த மாதம் ஐதராபாத்தில் பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கினார்.
அதன்பிறகு சுயநினைவை இழந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது காலர் போன் உடைந்ததாகவும், மேலும் காயங்கள் ஏற்பட்டதாகவும் சொன்னார்கள். கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார்.
தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளாராம். உடனடியாக தனது அடுத்த பட படப்பிடிப்பில் கலந்து கொள்ள சாய் விரும்பியதாகவும், ஆனால், அவரை இரண்டு மாதம் முழு ஓய்வு எடுக்கும்படி குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.
இன்று அவருடைய பிறந்தநாளுக்கு முன்னதாகவே வீடு திரும்பியது குறித்து குடும்பத்தினரும், உறவினர்களும், ரசிகர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள். அவருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.




