25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரும், சிரஞ்சீவியின் உறவினருமான நடிகர் சாய் தரம் தேஜ், கடந்த மாதம் ஐதராபாத்தில் பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கினார்.
அதன்பிறகு சுயநினைவை இழந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது காலர் போன் உடைந்ததாகவும், மேலும் காயங்கள் ஏற்பட்டதாகவும் சொன்னார்கள். கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார்.
தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளாராம். உடனடியாக தனது அடுத்த பட படப்பிடிப்பில் கலந்து கொள்ள சாய் விரும்பியதாகவும், ஆனால், அவரை இரண்டு மாதம் முழு ஓய்வு எடுக்கும்படி குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.
இன்று அவருடைய பிறந்தநாளுக்கு முன்னதாகவே வீடு திரும்பியது குறித்து குடும்பத்தினரும், உறவினர்களும், ரசிகர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள். அவருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.