மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் கடந்த சில வாரங்களாக பரபரப்பை ஏற்படுத்திய சமந்தா, நாக சைதன்யா பிரிவு விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி வருகிறது.
சென்னையைச் சேர்ந்த சமந்தா, நாக சைதன்யாவைத் திருமணம் செய்து கொண்டதும் ஐதராபாத்திலேயே கணவருடன் தனி வீட்டில் குடியேறினார். ஆனால், அந்த வீட்டை விட்டு சில மாதங்களுக்கு முன்பாகவே நாக சைதன்யா வெளியே போய்விட்டார் என்றார்கள். இருந்தாலும் சமந்தா இன்னும் அந்த வீட்டில்தான் இருந்து வருகிறார். ஐதராபாத்தை விட்டுச் செல்லும் எண்ணமில்லை என்றும் கடந்த வாரம் சமந்தா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஹோட்டல், அப்பா நாகார்ஜுனா வீடு என மாறி மாறி இருந்து வந்த நாக சைதன்யா தற்போது ஒரு புதிய அப்பார்ட்மென்ட்டிற்குச் சென்றுள்ளாராம். அதோடு, ஐதராபாத் ஜுபிலி ஹில்ஸ் பகுதியில் நடிகை தபுவுக்குச் சொந்தமான வீட்டை வாங்கியுள்ளாராம் நாகசைதன்யா. அந்த வீட்டில் சில பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறதாம். அந்த வேலைகள் முடிந்ததும் அந்த வீட்டிலேயே குடி புகுவார் எனத் தெரிகிறது.
அப்பா வழியில் நாக சைதன்யாவும் சில வருடங்கள் கழித்து இரண்டாவது திருமணம் செய்து கொள்வார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.