'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் கடந்த சில வாரங்களாக பரபரப்பை ஏற்படுத்திய சமந்தா, நாக சைதன்யா பிரிவு விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி வருகிறது.
சென்னையைச் சேர்ந்த சமந்தா, நாக சைதன்யாவைத் திருமணம் செய்து கொண்டதும் ஐதராபாத்திலேயே கணவருடன் தனி வீட்டில் குடியேறினார். ஆனால், அந்த வீட்டை விட்டு சில மாதங்களுக்கு முன்பாகவே நாக சைதன்யா வெளியே போய்விட்டார் என்றார்கள். இருந்தாலும் சமந்தா இன்னும் அந்த வீட்டில்தான் இருந்து வருகிறார். ஐதராபாத்தை விட்டுச் செல்லும் எண்ணமில்லை என்றும் கடந்த வாரம் சமந்தா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஹோட்டல், அப்பா நாகார்ஜுனா வீடு என மாறி மாறி இருந்து வந்த நாக சைதன்யா தற்போது ஒரு புதிய அப்பார்ட்மென்ட்டிற்குச் சென்றுள்ளாராம். அதோடு, ஐதராபாத் ஜுபிலி ஹில்ஸ் பகுதியில் நடிகை தபுவுக்குச் சொந்தமான வீட்டை வாங்கியுள்ளாராம் நாகசைதன்யா. அந்த வீட்டில் சில பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறதாம். அந்த வேலைகள் முடிந்ததும் அந்த வீட்டிலேயே குடி புகுவார் எனத் தெரிகிறது.
அப்பா வழியில் நாக சைதன்யாவும் சில வருடங்கள் கழித்து இரண்டாவது திருமணம் செய்து கொள்வார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.