சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

தெலுங்கில் தற்போது தயாராகி வரும் புஷ்பா படத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜூன், கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு மீண்டும் அடுத்த மாதம் இப்படத்தில் நடிக்கிறார். இன்னும் இரண்டு மாதத்தில் புஷ்பா முதல் பாகத்தில் நடித்து முடிக்கும் அல்லு அர்ஜூன், அதைத் தொடர்ந்து தில் ராஜூ தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட இந்த படத்தை ஸ்ரீராம்வேணு என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் முதல்முதலாக கண்பார்வை இல்லாதவராக நடிக்கிறார் அல்லு அர்ஜூன். செப்டம்பர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதுவரை நான் நடிக்காத வேடம். என்ற போதும் தைரியமாக அதை எதிர்கொள்ளப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார் அல்லு அர்ஜூன்.




