அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? | ரசிகர்களுடன் போட்டோ, விருந்து : தனுஷ் மாறியது ஏன் | மாளவிகா மோகனனின் பிறந்தநாளுக்கு போஸ்டர் வெளியிட்டு அசத்திய மும்மொழி பட குழுவினர் | 50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை |
கன்னட திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வந்தவர் நடிகர் சஞ்சாரி விஜய். இவர் நேற்று முன்தினம் (ஜூன் - 12) விபத்தில் சிக்கி ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் கூட பலனில்லாமல் கோமா நிலைக்கு சென்றார் சஞ்சாரி விஜய். இதையடுத்து அவர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவிக்க, அவரது உடல் உறுப்புகள் மருத்துவர்கள் வழிகாட்டுதலின்படி தானம் செய்யப்பட்டது. இவரது மறைவு கன்னடத் திரையுலகில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2014-ல் வெளியான நான் அவனில்ல அவளு என்கிற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அதற்காக தேசிய விருது பெற்றார் சஞ்சாரி விஜய். ஒரு முறை ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகர் மம்முட்டி தனக்காக போடப்பட்டிருந்த பாதுகாப்பு வளையத்தை மீறி ஒரு ஓரமாக அமர்ந்திருந்த சஞ்சாரி விஜய்யை தேடிச்சென்று பாராட்டி ஆச்சரியப்படுத்தினார். இத்தனைக்கும் மம்முட்டி அவரை நேரில் ஒருமுறை கூட பார்த்ததில்லை நான் அவனில்ல அவளு படத்தில் அவரது நடிப்பை பார்த்து வியந்து போய்த்தான், இப்படி ஒரு கௌரவத்தை மம்முட்டி அந்த நடிகருக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.