ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
வேகமாக பரவி வரும் கொரோனாவின் இரண்டாவது அலையும் அது ஏற்படுத்திவரும் பாதிப்பும் கடந்த வருடத்தை விட வீரியமாகவே இருக்கிறது. இதனால் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அரசு தரப்பில் இருந்தும் திரையுலக பிரபலங்கள் தரப்பில் இருந்தும் பல முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர். அந்தவகையில் பிளாஸ்மா தானம் செய்யுங்கள் என கூறி சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதனை தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் நடிகர் மகேஷ்பாபு..
மேலும், “கொரோனாவால் பாதிக்கப்பட்டு போராடுபவர்களுக்கு நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம். முன்னெப்போதையும் விட இப்போது பிளாஸ்மா தானம் தருபவர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர். இதுகுறித்து கமிஷனர் சஜ்ஜனார் துவங்கி வைத்துள்ள விழிப்புணர்வு பிரச்சாரத்தில் என்னையும் இணைத்துக்கொண்டு எனது ஆதரவை வழங்கியுள்ளேன். நீங்களும் பிளாஸ்மா தனம் செய்யுங்கள்.. பலரது வாழ்க்கையை காப்பாற்றுங்கள்” என ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் வேண்டுகோள் வைத்துள்ளார்.