ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக நடித்துவரும் நடிகர் மோகன்லால் தனது நீண்டநாள் கனவான டைரக்சன் துறையில் தற்போது அடியெடுத்து வைத்துள்ளார். அவர் முதன்முதலாக இயக்கும் 'பாரோஸ்' என்கிற படத்தின் துவக்க விழா பூஜை நேற்றுமுன்தினம் நடைபெற்றது. பேண்டசி படமாக உருவாகும் இந்தப்படத்தின் கதையை 'மைடியர் குட்டிச்சாத்தான்' பட இயக்குனர் ஜிஜோ பொன்னூஸ் தான் எழுதியுள்ளார். நேற்று நடைபெற்ற பூஜையில் கலந்துகொண்ட ஜிஜோ பொன்னூஸ், பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஒரு புதிய தகவல் ஒன்றை கூறினார்.
'இந்தப்படத்தின் கதையை தான் பல வருடங்களாக உருவாக்கினேன். இதை மோகன்லாலிடம் சொன்னபோது தானே இயக்குவதாக அவர் கூறினார். ஆனால் குழந்திகளுகான பேண்டசி கதையாக இதை நான் எழுதியிருந்தேன். மோகன்லால் முதன்முதலாக இயக்கம் படம் என்பதால் இது இளைஞர்களையும் கவரும் விதமாக இருக்க வேண்டும் என நினைத்தேன். இந்த கதையை மோகன்லாலிடம் கூறியபோதே அவரது மகள் விஸ்மாயாவும் இந்த கதையை கேட்டுவிட்டு, இளைஞர்களை கவரும் விதமாக இதில் என்னென்ன மாற்றங்களை செய்யலாம், என்ன விஷயங்களை புதிதாக சேர்க்கலாம் என கூறினார். அவரது ஆலோசனையையும் மனதில் வைத்து பைனல் ஸ்கிரிப்ட்டை உருவாக்கினோம்” என கூறினார்.