போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி | பிளாஷ்பேக் : நிஜமான குத்துச்சண்டை காட்சி இணைக்கப்பட்ட படம் | காந்தாரா சாப்டர் 1 : முதல் நாளில் 100 கோடியை கடக்குமா? | லண்டனில் மாஸ்டர் டிகிரியை முடித்த திரிஷ்யம் சின்னப்பொண்ணு | என் மூளையில் இருந்து லோகா கதையை திருடி விட்டார்கள் : இயக்குனர் வினயன் | காந்தார சாப்டர் 1ல் நடித்தது பெருமை : சம்பத் ராம் | இளையராஜா பேரன் யதீஷ்வரின் இசை ஆல்பம் : ரஜினி, கமல் வெளியிட்டனர் |
கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக நடித்துவரும் நடிகர் மோகன்லால் தனது நீண்டநாள் கனவான டைரக்சன் துறையில் தற்போது அடியெடுத்து வைத்துள்ளார். அவர் முதன்முதலாக இயக்கும் 'பாரோஸ்' என்கிற படத்தின் துவக்க விழா பூஜை நேற்றுமுன்தினம் நடைபெற்றது. பேண்டசி படமாக உருவாகும் இந்தப்படத்தின் கதையை 'மைடியர் குட்டிச்சாத்தான்' பட இயக்குனர் ஜிஜோ பொன்னூஸ் தான் எழுதியுள்ளார். நேற்று நடைபெற்ற பூஜையில் கலந்துகொண்ட ஜிஜோ பொன்னூஸ், பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஒரு புதிய தகவல் ஒன்றை கூறினார்.
'இந்தப்படத்தின் கதையை தான் பல வருடங்களாக உருவாக்கினேன். இதை மோகன்லாலிடம் சொன்னபோது தானே இயக்குவதாக அவர் கூறினார். ஆனால் குழந்திகளுகான பேண்டசி கதையாக இதை நான் எழுதியிருந்தேன். மோகன்லால் முதன்முதலாக இயக்கம் படம் என்பதால் இது இளைஞர்களையும் கவரும் விதமாக இருக்க வேண்டும் என நினைத்தேன். இந்த கதையை மோகன்லாலிடம் கூறியபோதே அவரது மகள் விஸ்மாயாவும் இந்த கதையை கேட்டுவிட்டு, இளைஞர்களை கவரும் விதமாக இதில் என்னென்ன மாற்றங்களை செய்யலாம், என்ன விஷயங்களை புதிதாக சேர்க்கலாம் என கூறினார். அவரது ஆலோசனையையும் மனதில் வைத்து பைனல் ஸ்கிரிப்ட்டை உருவாக்கினோம்” என கூறினார்.