இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மகாநடி படம் மூலம் தென்னிந்திய நடிகையாக மாறிவிட்ட கீர்த்தி சுரேஷ், தற்போது இந்திப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். அனைத்து மொழிகளிலும் கைவசம் படங்களை வைத்திருப்பதால் படப்பிடிப்பிற்காக பிசியாக கலந்து கொண்டு வருகிறார். இதனால் தற்போது தெலுங்கில் அவர் நடித்து, விரைவில் வெளியாக உள்ள 'ரங்தே' படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ள மாட்டார் என்றே சொல்லப்பட்டது..
அதனால் இந்தப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ள நிதின், கீர்த்தி சுரேஷ் புரமோஷன் நிகழ்சியில் கலந்து கொள்ள வேண்டும் என வித்தியாசமான பாணியில் வேண்டுகோள் விடுத்தார். கீர்த்தி சுரேஷின் பள்ளிக்கால போட்டோ ஒன்றை தனது கையில் வைத்தபடி சோஷியல் மீடியாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்ட நிதின், “மிஸ்ஸிங்.. காணவில்லை. டியர் அனு.. ரங்தே புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டே ஆக வேண்டும் என்பது எங்களுடைய மேலான கோரிக்கை.. இப்படிக்கு உன்னுடைய அர்ஜுன்” என நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தார். .
இதனையே அழைப்பாக ஏற்று கீர்த்தி சுரேஷும் தவறாமல் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.. இந்தப்படத்தில் அனுவாக கீர்த்தி சுரேஷும், அர்ஜுனாக நிதினும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.