காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் | நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் | உதவி செய்பவர்களை காயப்படுத்தாதீர்கள்: 'துள்ளுவதோ இளமை' அபிநய் | 'டீசல்' படப்பிடிப்பில் ஹரிஷ் கல்யாணை அதிர வைத்த மீனவர் |
சமீபத்தில் கேரளாவில் சையத் முஸ்தாக் அலி ட்ராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் கேரள அணிக்கும் மும்பை அணிக்கும் இடையே நடைபெற்ற டி-20 கிரிக்கெட் போட்டியில் கேரள அணியை சேர்ந்த முகமது அசாருதீன் என்கிற இளம் கிரிக்கெட் வீரர் 37 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். அடுத்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இவர் நிச்சயம் இடம் பிடிப்பார் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், தற்போது நடிகர் நிவின்பாலி இவருக்கு தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
முகமது அசாருதீனின் படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிவின்பாலி, இது குறித்து கூறும்போது, “என்ன ஒரு அடி அசாருதீன்....!! வாழ்த்துக்கள் பிரதர்” என கூறியுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன் கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியான 1983 என்கிற படத்தில் கிராமத்து கிரிக்கெட் வீரராக நிவின்பாலி நடித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.