ஆஸ்கர் விருது - நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் |

தமிழக திரையரங்குகளில் நூறு சதவீத இருக்கைகளில் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என முதலில் தமிழக அரசு தளர்வுகளை அளித்தது. ஆனால் மத்திய அரசு மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றின் எச்சரிக்கை காரணமாக மீண்டும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள் இதனால் ஏற்படும் இழப்பை சரிகட்ட, ரசிகர் காட்சிகள் என்கிற பெயரில் ஒருநாளைக்கு ஆறு காட்சிகள் வரை நடத்தலாம் என திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் நிலைமை இப்படி இருக்க, இன்று(ஜன., 13) முதல் திரையரங்குகள் திறக்கப்படவுள்ள கேரளாவிலோ நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அங்கே 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதுடன், தியேட்டர்களில் இரவுக்காட்சி (9.30மணி காட்சி) திரையிடக்கூடாது என புது உத்தரவையும் பிறப்பித்துள்ளனர். விஜய்யின் மாஸ்டர் படம் மூலம் திரையரங்குகளை திறக்க நினைத்த உரிமையாளர்களுக்கு இது அதிர்ச்சி அளித்தாலும், அதற்கு பதிலாக முன்கூட்டியே காலை காட்சி ஒன்றை திரையிட்டு சமாளிக்க முடிவெடுத்து உள்ளார்களாம்..




