பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? |

தமிழக திரையரங்குகளில் நூறு சதவீத இருக்கைகளில் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என முதலில் தமிழக அரசு தளர்வுகளை அளித்தது. ஆனால் மத்திய அரசு மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றின் எச்சரிக்கை காரணமாக மீண்டும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள் இதனால் ஏற்படும் இழப்பை சரிகட்ட, ரசிகர் காட்சிகள் என்கிற பெயரில் ஒருநாளைக்கு ஆறு காட்சிகள் வரை நடத்தலாம் என திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் நிலைமை இப்படி இருக்க, இன்று(ஜன., 13) முதல் திரையரங்குகள் திறக்கப்படவுள்ள கேரளாவிலோ நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அங்கே 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதுடன், தியேட்டர்களில் இரவுக்காட்சி (9.30மணி காட்சி) திரையிடக்கூடாது என புது உத்தரவையும் பிறப்பித்துள்ளனர். விஜய்யின் மாஸ்டர் படம் மூலம் திரையரங்குகளை திறக்க நினைத்த உரிமையாளர்களுக்கு இது அதிர்ச்சி அளித்தாலும், அதற்கு பதிலாக முன்கூட்டியே காலை காட்சி ஒன்றை திரையிட்டு சமாளிக்க முடிவெடுத்து உள்ளார்களாம்..