அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் |
ரிலீஸுக்கு முன்பே மிகுந்த எதிர்பார்ப்புக்கு ஆளாகும் படங்கள், அந்த சுமையினாலேயே பெரும்பாலும் அந்த எதிர்பார்ப்பை ஈடுகட்ட தவறும் நிகழ்வுகள் சினிமாவில் அதிகம் நிகழ்வதுண்டு. மலையாளத்தில் வெளியான மோகன்லால் நடித்த 'ஒடியன்' படமும் அப்படித்தான். மிக பிரமாண்டமாக உருவான இந்தப்படம் மோகன்லாலின் புலி முருகன் படத்திற்கு பிறகு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாக அமைந்தது.
ஆனால் அறிமுக இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் இதை சரியாக ரசிகர்களுக்கு கொண்டுசெல்ல தவறிவிட்டார் என்றே பலரும் சொல்கிறார்கள். சமீபத்தில் படம் ரிலீஸாவதற்கு முன் ஒரு பேட்டியில் மோகன்லால் பேசியபோது, “இந்தப்படத்தில் பாடல்கள், சண்டைக்காட்சிகள் என எல்லா அம்சங்களும் இருகின்றன. ஆனால் இது ஒரு பாவம் படம்.. மிகப்பெரிய மேஜிக் எல்லாம் இல்லை. வழக்கமான ஒரு கிராமத்தை பற்றிய கதை தான்” என கூறியிருந்தார்.. ஆனால் அவர் தன்னடக்கத்துடன் சொல்கிறார் என நினைத்தவர்களுக்கு, படம் பார்த்தபின்னர் தான், அவர் சூசகமாக படத்தை பற்றி சொன்னதே புரியவந்ததாம்.