100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
தன்னை வைத்து ஏற்கனவே படம் இயக்கிய இயக்குனர்களுக்கு மீண்டும் அவ்வப்போது வாய்ப்பு கொடுத்து வருகிறார் மம்முட்டி. அப்படிப்பட்ட ஒருவர் தான் இயக்குனர் ஜானி ஆண்டனி. சசிகுமாரை தான் இயக்கிய 'மாஸ்டர்ஸ்' படம் மூலம் மலையாளத்தில் நடிக்க வைத்தவர். இவரது இயக்கத்தில் ஏற்கனவே 'துருப்பு குலான்', 'பட்டணத்தில் பூதம், தப்பன்னா, தோப்பில் ஜோப்பன் என நான்கு படங்களில் நடித்துள்ளார் மம்முட்டி.
இதையடுத்து சமீபத்தில் மம்முட்டியை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார் ஜானி ஆண்டனி. அப்போது அவரிடம் தங்கள் கூட்டணியில் வெளியான 'பட்டணத்தில் பூதம்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தால் நன்றாக இருக்கும்.. எடுக்க முடியுமா என கேட்டுள்ளார். ஜானி ஆண்டனியும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டு இரண்டாம் பாகத்திற்கான வேளையில் இறங்கியுள்ளார்.
2009ல் வெளியான பட்டணத்தில் பூதம் படம் குழந்தைகளை கவரும் விதமாக மந்திர தந்திர மாயாஜாலம் நிறைந்த படமாக வெளியானது. இதில் மம்முட்டி சர்க்கஸ் கலைஞர், பூதம் என இரண்டு கேரக்டர்களில் நடித்திருந்தார்.