குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
நடிகை கடத்தல் வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளாகினார் என்கிற காரணத்திற்காக மலையாள நடிகர் திலீப்பை நடிகர் சங்கத்தில் இருந்து விலக்கவேண்டும் என சினிமா பெண்கள் நல அமைப்பை சேர்ந்த ரேவதி, பார்வதி, ரம்யா நம்பீசன் ஆகியோர் மலையாள நடிகர் சங்கத்தை கடுமையாக நிர்ப்பந்தித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு, நடிகர் சங்கத்திற்கு இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த மோகன்லால், நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் ராஜினமா செய்துவிட்டார் என அறிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பேச தன்னை வந்து சந்திக்குமாறு திலீப்பிற்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் தன்னை வந்து சந்தித்தபோது திலீப்பிடம் ராஜினமா செய்யும்படி தான் வலியுறுத்தியதாகவும், திலீப்பும் எந்த மறுபேச்சும் இல்லாமல் ராஜினமா கடிதம் கொடுத்துவிட்டதாகவும் கூறினார் மோகன்லால்.
திலீப் அவராகவே ராஜினமா செய்ததாக நடிகர் சித்திக் கூறியிருந்தாரே என நிருபர்கள் மோகன்லாலிடம் கேள்வி எழுப்ப, “நான் என்ன செய்தேனோ அதைத்தான் நான் சொல்கிறேன். நான் சொல்வதை நம்பினால் நம்புங்கள்.. இல்லை உங்களுக்கு எது நம்பிக்கையாக தெரிகிறதோ அதையே நம்புங்கள்” என கோபமாக கூறினாராம் மோகன்லால்.