சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மோகன்லால் நடிப்பில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் மகாபாரத கதையை படமாக்க இருப்பதாக கடந்த ஆண்டே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மலையாள இயக்குனரும், கதாசிரியருமான எம்.டி.வாசுதேவன் நாயர் மகாபாரதத்தை தழுவி எழுதிய 'ரண்டமூழம்' என்கிற நாவலை மையமாக வைத்து இந்தப்படம் உருவாக இருக்கிறது. இதை தற்போது 'ஒடியன்' படத்தை இயக்கிவரும் ஸ்ரீகுமார் மேனன் தான் இயக்கவுள்ளார்.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தப்படத்திற்காக தான் போட்டிருந்த ஒப்பந்த காலம் முடிந்துவிட்டதாகவும், குறிப்பிட்ட காலத்தில் இந்த கதையை படமாக்க தவறியதால் படத்தின் ரைட்ஸை தன்னிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என எம்.டி. வாசுதேவன் நாயர் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த பிரச்சனையை எம்.டி. வாசுதேவன் நாயருடன் கலந்துபேசி சரி செய்து வருவதாக இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் கூறியிருந்தார்.
இந்தநிலையில் துபாயில் இருக்கும் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் பி.ஆர்.ஷெட்டி, “கேரளாவில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் மகாபாரதம் கதையை நான் தயாரிப்பது பணத்திற்காக அல்ல. அதை உலகம் முழுதும் உள்ள மக்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்காகத்தான். நிச்சயம் அந்தப்படம் தயாராகும். அது ரண்டமூழம் நாவலா இல்லை வேறு ஒன்றா என்பது பற்றி எனக்கு கவலையில்லை” என கூறியுள்ளார்..