ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர், மகாபாரதத்தை தழுவி எழுதிய ரண்டமூழம் நாவல், ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரமாண்டமான படமாக உருவாக இருப்பதாக கடந்த வருடம் அறிவிப்பு வெளியானது. மோகன்லால் பீமனாக நடிக்கவுள்ள இந்தப்படத்தை பிரபல விளம்பரப்பப்பட்ட இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் இயக்கவுள்ளார்.
இந்தநிலையில் ரண்டமூழம் படத்தின் கதாசிரியர் எம்.டி.வாசுதேவன் நாயர், அந்தப்படத்தை இயக்கவுள்ள ஸ்ரீகுமார் மேனன், தனது ஸ்க்ரிப்ட்டின் உரிமையை தன்னிடம் திருப்பி தரவேண்டும் என கோழிக்கோடு முன்சீப் கோர்ட்டை அணுகியுள்ளார்.
“இந்தப்படத்தின் ஸ்கிரிப்ட்டில் தான் தீவிரமாக பணியாற்றி, இதன் மலையாள மற்றும் ஆங்கில வசனங்களையும் எழுதிக்கொடுத்து ஒப்பந்தம் போட்டபோது, இந்தக்கதையை மூன்று வருடங்களுக்குள் படமாக்க வேண்டும் என ஒரு நிபந்தனையையும் குறிப்பிட்டிருந்தாராம்.
ஆனால் இந்த ஒப்பந்தம் போடப்பட்டு தற்போது நான்கு வருடம் ஆகிவிட்டதாம். மூன்று வருடம் முடிந்தும், அதன்பின் ஒரு வருடம் வரை காத்திருந்து பார்த்த எம்.டி.வாசுதேவன் நாயர், படப்பிடிப்பு துவங்கப்படும் அறிகுறி எதுவும் தென்படாததால் கோபமாகித் தான் இந்த முடிவை எடுத்துள்ளாராம்.
ஆனால், இதில் சம்பந்தப்பட்ட அதே இயக்குனர் தான் தற்போது மோகன்லாலை வைத்து 'ஒடியன்' என்கிற படத்தை கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..