சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி மர்மமான முறையில் மரணத்தை தழுவி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டன. இந்தநிலையில் பிரபல இயக்குனரும் கலாபவன் மணியின் திரையுலக குருவுமான வினயன் 'சாலக்குடிக்காரன் சங்காதி' என்கிற பெயரில் அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்கியுள்ளார்.
கலாபவன் மணிக்கும் தனக்கும் மட்டுமே தெரிந்த சில ரகசியங்களை இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறாராம் இயக்குனர் வினயன். குறிப்பாக, கலாபவன் மணி ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த புதிதில் ஒரு பிரபல நடிகையை தனது படத்தில் ஜோடியாக நடிக்க கேட்டதாகவும் அந்த நடிகை அவரது நிறத்தை காரணம் காட்டி அவரை ஒதுக்கியதாகவும் சொல்லப்பட்டது.
ஆனால் பத்து வருட காலம் கடந்தபின், அந்த நடிகையுடன் நடிக்காவிட்டாலும், அந்த நடிகைக்கு மவுசு குறையத் தொடங்கிய நேரத்தில் அவருக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்தாராம் கலாபவன் மணி.
மலையாளத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம்வந்த அந்த நடிகை யார் என்கிற உண்மையை இந்தப்படத்தில் உடைத்துள்ளாராம் வினயன். இது தெரிய வரும்போது ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் மிகப்பெரிய அத்ரிசியாக இருக்கும் என்றும் கூறி சஸ்பென்ஸ் வைத்துள்ளார் வினயன்.