சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சமீபத்தில் மலையாளத்தில் பிருத்விராஜ், ரஹ்மான் நடிப்பில் ரணம் என்கிற படம் வெளியானது.. நிர்மல் சஹாதேவ் என்பவர் இயக்கிய இந்தப்படம் வெளிநாட்டு கேங்ஸ்டர் சண்டையை பின்னணியாக கொண்டு உருவாகி இருந்ததால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை..
இந்தப்படம் வெளியான ஒருவாரம் கழித்து ஒரு பேட்டியில் பிருத்விராஜ் பேசியபோது, "சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை அடைவது எனது நோக்கமல்ல.. கூடே மாதிரி படம் ஓடும் என்பது தெரியும்.. ரணம் மாதிரியான படங்கள் சரியாக போகாது என தெரியும். அதனால் வெற்றி தோல்வி பற்றி கவலைப்பட கூடாது. பரிசோதனை முயற்சியாக வித்தியாசமான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை" என கூறியுள்ளார்.
பிருத்விராஜின் இந்த பேச்சு ரணம் பட தயாரிப்பாளர்களில் ஒருவரான பிஜூ தாமஸை ரொம்பவே காயப்படுத்தி விட்டது. இதுகுறித்து தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ள பிஜூ தாமஸ், "ஒரு படம் தியேட்டர்களில் ஒடிக்கொண்டு இருக்கும்போதே, அது சரியாக போகவில்லை என பிருத்விராஜ் சொல்லியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் சோதனை முயற்சியாக வித்தியாசமான படங்களில் நடிக்கவேண்டும் என்றால் தனது சொந்த பணத்தில் நடிக்கவேண்டும் தவிர தயாரிப்பாளர் காசை காரியாக்க கூடாது" என காட்டமாக கூறியுள்ளார்.