ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் |
மலையாள சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் ராசியான கதாநாயகி யாரென்றால் அது ஐஸ்வர்ய லட்சுமி தான். நிவின்பாலி, டொவினோ தாமஸ் ஆகியோருடன் ஜோடியாக நடித்த இவர், தற்போது அமல் நீரத் இயக்கத்தில் உருவாகி வரும் வரதன் படத்தில் பஹத் பாசில் ஜோடியாக நடித்துள்ளார்.
இந்தப்படத்திற்காக முதலில் இவரை அணுகிய இயக்குனர் அமல் நீரத், தனக்கு அவ்வளவாக கதை சொல்ல வராது என்றும், தான் சொல்வதை வைத்து கதையை தெரிந்து கொள்ளுங்கள் என்றும் கூறினாராம். அப்போது இந்தப்படத்தில் ஹீரோவாக பஹத் பாசில் நடிப்பதாக கூறினாராம்
அதை கேட்டதும், பஹத் பாசிலே இந்தப்படத்தில் நடிக்கிறார் என்றால் இந்தப்படத்தின் கதையை நீங்கள் என்னிடம் சொல்லவே தேவையில்லை. இந்தப்படத்தில் நான் நடிக்கிறேன் என கூறினாராம் ஐஸ்வர்ய லட்சுமி. ஆனாலும் படத்தின் கதையையும் ஐஸ்வர்ய லட்சுமியின் கேரக்டரையும் அவரிடம் விளக்கி சொல்லி அதன்பின்பே அவரை ஒப்பந்தம் செய்தாராம் அமல் நீரத்.