ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள நடிகர் மோகன்லால் விரைவில் அரசியலில் குதிக்க இருக்கிறார் என்பதுது தான் கேரளாவில் இப்போதைய பரபரப்பு. கடந்த சில தினங்களுக்கு முன்பு டில்லி சென்ற மோகன்லால், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இதற்கு முன்பு பல தருணங்களில் மோகன்லால் பிரதமர் நரேந்திர மோடியையும், அவரின் செயல்பாட்டையும் பாராட்டி வந்துள்ளார். அதனால் அவர் விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் இணையப் போகிறார் என்ற செய்தி பரவியது.
"பாரதிய ஜனதா கட்சி வலுவாக காலூன்ற முடியாத மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. அதனால் அங்குள்ள திரைப்பட நட்சத்திரங்களை பயன்படுத்தி கட்சியை பலப்படுத்த நினைக்கிறது. தமிழ்நாட்டில் ரஜினி, கேரளாவில் மோகன்லால் என்பது தான் பா.ஜ.கவின் டார்கெட்" என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இதற்கிடையில் வருகிற பாரார்லிமென்ட் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திருவனந்தபுரம் தொகுதியில் மோகன்லால் போட்டியிடப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனை மோகன்லால் வலுவாக மறுக்கவில்லை.
இதுபற்றி அவர் கூறும்போது ''பா.ஜனதா சார்பில் திருவனந்தபுரம் தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எனது அறக்கட்டளை நடத்தும் விழாவுக்கு அழைப்பு விடுக்கவே பிரதமரை சந்திதேன். எனது வேலையை செய்ய விடுங்கள்'' என்றார்.