டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மலையாளம் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார் துல்கர் சல்மான். இதற்காக பெரும்பாலும் விமானத்தில் பறந்தபடியே தான் இருக்கிறார் மனிதர். அப்படி சமீபத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சென்றபோது சக பயணிக்கு நடந்த அவமானம் துல்கரை கோபம் கொள்ள செய்திருக்கிறது.
இதுகுறித்து சோஷியல் மீடியாவில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள துல்கர் சல்மான், "நான் பல விமான நிலையங்களின் சோதனை செய்யும் இடங்களிலும், வெளியேறும் வாயில்களிலும் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களின் மோசமான நடத்தைகளை பார்த்துள்ளேன். உங்கள் பயணியர் அனைவரும் ஒரு மோசமான அனுபவத்துடன் தான் வீட்டிற்கு போக வேண்டும் என நினைக்கிறீர்களா..? என காட்டமாக கேட்டுள்ளார்.




