‛ஜனநாயகன்' படத்திற்கு சான்று அளிக்க சொன்ன உத்தரவுக்கு தடை : சிக்கலில் விஜய் படம் | அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் பட அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகிறது | ராஜ்குமார் பெரியசாமி படத்திற்காக ஸ்டைலிஷாக மாறும் தனுஷ் | ரசிகர்களை வீட்டு வாசலுக்கே வந்து வரவேற்று அழைத்துச் சென்ற பிரபாஸ் | விஜய், பிரபாஸை ஓவர்டேக் செய்த சாரா அர்ஜுன் | கலைக்கல்லூரியில் டாக்டர்களை தேடிய ஸ்ரீலீலா | பொங்கலுக்கு வருகிறது திரவுபதி 2 | ஆஸ்கருக்கு தேர்வான ‛டூரிஸ்ட் பேமிலி, காந்தாரா சாப்டர் 1, மகாவதார் நரசிம்மா' | ‛பராசக்தி'க்கு போட்டியாக ‛மஹாசக்தி' | மீண்டும் ஆயிரம் கோடி வசூலை எட்டுவாரா பிரபாஸ் |

மலையாளம் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார் துல்கர் சல்மான். இதற்காக பெரும்பாலும் விமானத்தில் பறந்தபடியே தான் இருக்கிறார் மனிதர். அப்படி சமீபத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சென்றபோது சக பயணிக்கு நடந்த அவமானம் துல்கரை கோபம் கொள்ள செய்திருக்கிறது.
இதுகுறித்து சோஷியல் மீடியாவில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள துல்கர் சல்மான், "நான் பல விமான நிலையங்களின் சோதனை செய்யும் இடங்களிலும், வெளியேறும் வாயில்களிலும் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களின் மோசமான நடத்தைகளை பார்த்துள்ளேன். உங்கள் பயணியர் அனைவரும் ஒரு மோசமான அனுபவத்துடன் தான் வீட்டிற்கு போக வேண்டும் என நினைக்கிறீர்களா..? என காட்டமாக கேட்டுள்ளார்.