சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தெலுங்கில் இளம் நடிகர்களுக்கு ஈடுகொடுத்து முன்னை விட ஆக்ரோஷமாக படங்களில் நடித்து வருகிறார் நடிகர் பாலகிருஷ்ணா. தற்போது தனது தந்தையின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வரும் என்.டி.ஆர். என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் சர்வதேச தரத்தில் பல ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமான ஸ்டுடியோ ஒன்றை அவர் உருவாக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே பாலகிருஷ்ணாவின் மனதில் இப்படி ஒரு திட்டம் இருந்து வந்துள்ளது.
சமீபத்தில் அரசு இதுபோன்ற திரைப்பட நகரங்களையும் ஸ்டுடியோக்களையும் உருவாக்க முன்வருபவர்களுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் மானியங்களையும் வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து, பாலகிருஷ்ணா தான் ஏற்கனவே கிடப்பில் போட்டிருந்த இந்த திட்டத்தை தூசு தட்டப்போகிறாராம்.