சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கடந்த வருடம் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை கடத்தல் வழக்கில் மலையாள நடிகர் திலீப் செய்யப்பட்டு மூன்றுமாத சிறைவாசத்திற்குப்பின் ஜாமினில் விடுதலையானார். இந்த வழக்கில் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அவர் தன்னை நிரபராதி என நிரூபிக்கும் ஒரு பகுதியாக சில வேலைகளை செய்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக சம்பந்தப்பட்ட நடிகை கடத்தப்பட்ட சமயத்தில் காருக்குள் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் வீடியோ காட்சிகளின் உண்மைத்தன்மையை ஆராய தனக்கு ஒரு வீடியோ பிரதி தருமாறு கடந்த பிப்ரவரி மாதம் அங்கமாலி நீதிமன்றத்தில் வேண்டுகோள் வைத்தார்.
ஆனால் நீதிமன்றம் திலீப்பின் கோரிக்கையை நிராகரித்தது. அதேசமயம் வீடியோக்கள் தவிர மற்ற சில ஆதாரங்களின் பிரதியை திலீப்பிற்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து கேரளா உயர்நீதிமன்றத்தில் திலீப் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் இதற்கு முன்னதாக அங்காமலி நீதிமன்றம் கூறிய அதே கருத்தை மேற்கோள் கட்டி திலீப்பின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
இதுபோக இன்னொரு பக்கம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் என திலீப் கோரிக்கை வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.