அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் |
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் விளம்பர படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் ஒரு ஜவுளிக்கடை விளம்பரத்தில் ராட்டையில் நூல் நூற்பது போன்று நடித்தார். இதற்கு கேரள மாநில காதி வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மோகன்லாலுக்கு கேரள காதி வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து கேரள காதி வாரிய தலைவர் ஷோபனா ராஜ் கூறியதாவது:
ராட்டை நமது தேசிய அடையாளம். காந்தியத்தின் அடையாளம். ராட்டை மூலம் காதி துணிகள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. ஆனால் காதிக்கும், ராட்டைக்கும் தொடர்பே இல்லாத ஒரு விளம்பரத்தில் மோகன்லால் ராட்டையை பயன்படுத்தி நடித்திருக்கிறார். இதன் மூலம் ராட்டை குறித்து மக்களிடம் தவறான புரிதல் ஏற்படும். காதி துணிகள் என்ற பெயரில் போலி துணிகள் வியாபாரத்துக்கு வரும் ஆபத்து உள்ளது. இதையட்டி, மோகன்லாலுக்கும், கடை நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம் என்றார்.