ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள திரையுலகில் கடந்த 15 வருடங்களாக நடிகர் சங்க தலைவராக இருந்து வந்த இன்னொசன்ட் சமீபத்தில் அந்த பதவியில் இருந்து விலகினார். தற்போது புதிய தலைவராக மோகன்லால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் பொறுப்பேற்ற தினத்தில் இருந்தே பிரச்சனைகள் களைகட்ட தொடங்கிவிட்டன.
கடந்த வருடம் நடிகை வழக்கில் சிக்கி, நடிகர் சங்கத்தில் இருந்து விலக்கப்பட்ட நடிகர் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்தது, தலைவரான மோகன்லால் மீது பலருக்கும் மிக பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சங்கத்தின் இந்த முடிவிற்கு, எதிர்ப்பு தெரிவித்து சில நடிகைகள் சங்கத்தில் இருந்து விளகியுள்ளனர். மேலும் சில நடிகைகள் திலீப்பை சங்கத்தில் சேர்ப்பதை மாற்றிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் இதைப்பற்றி எல்லாம் மோகன்லால் அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை. இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய மோகன்லால், "நடிகர் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்தது என்னுடைய தனிப்பட்ட முடிவு அல்ல. அன்று நடந்த பொது குழுவில் கலந்துகொண்ட அனைவரும் ஒருமனதாக எடுத்த ஏகோபித்த முடிவுதான். அந்த பொது குழுவில் கலந்து கொள்ளாத சிலர் வேண்டுமென்றே இதுபோன்ற சங்கத்திற்கு எதிராக தேவையில்லாத விஷயங்களை பரப்பி சர்ச்சைகளை கிளப்பிவருகின்றனர். அவர்களை நாம் கண்டுகொள்ள தேவையில்லை என கூறியுள்ளார்.